பொலிஸில் முறையிட்ட ஜீவன் குமாரணதுங்கவின் மகள் மல்ஷா

கொழும்பு,செப் 14

நடிகரும் அரசியல்வாதியுமான ஜீவன் குமாரணதுங்கேவின் மகள் மல்ஷா குமாரணதுங்க பொலிஸில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

போதைப்பொருளுடன் தாம் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்தே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

தனது வாகனத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் பொரலஸ்கமுவையில் வைத்து  தாம் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமையை அவர் முன்னதாக மறுத்திருந்தார்.

இந்தநிலையில் இந்த பொய்யான தகவலை முதலில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த நபருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்ததாக மல்ஷா குமாரணதுங்க கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *