இராஜாங்க அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பீரிஸ்!

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 38ஆக அதிகரித்திருப்பது, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் உதவிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகளைப் பெறுவதில் உள்ள தடைகளை போக்குவதில் அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை எனவும் கூறினார்.

இராணுவத்தினரைப் போல எண்ணிக்கைக் கொண்ட இராஜாங்க அமைச்சர்களை கொண்ட அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்புகளிடமிருந்து ஒருபோதும் உதவிகள் கிடைக்காது என்றார்.

மேலும், எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க நிதி இல்லாத இந்நேரத்தில், இராஜாங்க அமைச்சர்களை நியமித்திருப்பது பிரயோசனமற்றது எனவும் கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *