களனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

களனி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ, சுட்டுக் கொல்லப்பட்டவரின் அடையாளமோ இதுவரை வெளியாகவில்லை.

துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *