உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (15-09-2022) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டீ தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த விண்ணப்பங்களை நாளை முதல் இணையவழி வாயிலாக அனுப்பிவைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீள்திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டீ தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *