
மனித உரிமை மீறல்கள்,போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து சிறிலங்கா அரசாங்கமும்,அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும்.அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரி மைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் நாடா அல் -நஷீப்பின் உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் 17 பக்க எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் , அதன் சாராம்சத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பதில் ஆணையாளர் வாசித்திருந்தார் .
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 51 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்றது .
இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளில் சிறிலங்கா தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் பதில் ஆணையாளர் ஆற்றிய உரையை வரவேற்கின்றோம் . அதேவேளை . சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிக்கையையும் நாம் வரவேற்கின்றோம் . ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் ஏற்கனவே நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்து ரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை .
மனித உரிமை மீறல் கள் , போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐ.நா.தீர்மானத்தின் பரிந்துரை களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து உதாசீனம் செய்து வருகின்றது .
அரசி யல் தீர்வு சம்பந்தமான பரிந்துரையை யும் கூட சிறிலங்கா நடைமுறைப்படுத் தவில்லை . பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் நடைமுறையில்தான் இருக் கின்றது . அதன் கீழ் கைது நடவடிக்கை கள் தொடர்கின்றன .ஐ.நா.வுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறை வேற்றப்படவில்லை .
அந்த வாக்குறுதி களைக் கிடப்பில் போட்டுவிட்டு சர்வதேச சமூகத்தை இதுவரை காலமும் சிறி லங்கா அரசாங்கம் ஏமாற்றி வந்தது . மனித உரிமை மீறல்கள் , போர்க்குற்றங் கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து சிறிலங்கா அரசாங் கமும் , அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் இந்தமுறை ஜெனிவாவில் நில வேற்றப்படவேண்டும் .
இதற்கு ஐக் நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் . பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீரவேண்டும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார் .
பிற செய்திகள்