நல்லெண்ண அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள்! இந்திய மீனவர் பஞ்சாயத்தார்கள் கோரிக்கை

இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்தமைக்காக கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்குமாறு காரைக்கால், நாகைபட்டிணத்தின் மீனவர் பஞ்சாயத்தார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தமிழகத்தைச்சேர்ந்த மீனவர்கள் பாக்குநீரிணையை அண்மித்து மீன்பிடியில் ஈடுபடுகின்றபோது, இலங்கையின் கடற்பரப்புக்குள் பிரவேசித்தும் உள்ளார்கள்.

இச்சமயத்தில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவ்வாறானவர்கள் விடுவிக்கப்படுகின்றபோதும், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் மீண்டும் கையளிக்கப்படவில்லை.

இதேபோன்று தான் இந்தியக் கடற்பரப்புக்குள் பிரவேசித்த போது இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் அவர்களின் படகுகள் இன்னமும் கையளிக்கப்படவில்லை.

இந்த நிலைமையானது 2018ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் நீடித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பல்வேறு மட்டங்களில் அப்படகுகளை விடுவிப்பதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அவ்வாறான பின்னணியின் கடந்த ஜுன், ஜுலை மாதங்களில் இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான ஆறுபடகுகள் முதற்கட்டமாக இந்தியாவின் மத்திய, மாநில அரசாங்கத்தின் அனுமதிகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கைக்குள் பிரவேசித்தமைக்காக கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம். மீனவர்களுக்கு இடையிலான புரிதலின் அடிப்படையில் இந்தப் படகுகளை விடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாக உள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் அத்துமீறல்களை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசாங்கத்தினால் நீலப்புரட்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டமானது, இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் பிரவேசிப்பதை முழுமையாக தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்பதோடு இந்த திட்டத்தின் கீழ் மீனவர்களும் தமது ரோலர் உள்ளிட்ட தொழில்முறைகளை மாற்றுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *