யாழ் . மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிப்பை துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என ஜனாதிபதியிடம் யாழ் .மாநகர பதில் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிக்கப்பட்ட யாழ் . மாநகரசபைக்கான புதிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு தங்களுடைய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்பையும் முன் முயற்சியையும் வரவேற்கின்றேன் .
சபையின் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தாங்கள் பிரதமராக இருந்த போது தங்களது ஆதரவில் மாநகரசபையின் முன்னாள் முதல்வரின் பங்குபற்ற லோடு 07.07.2019 அன்று நடைபெற்றது .
நிர்ணயிக்கப்பட்ட காலப்பகு தியில் புதிய கட்டடத் தொகுதியை கட்டி முடிப்பதற்கு 2350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்ப ட்டிருந்தது .
எவ்வாறாயினும் தங்களது முயற்சியின் விளைவாக இத் திட்டத்திற்கு மாநகரசபைக்கு 800 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது .
தற்போது முன்னெப்போதும் ஏற்படாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான முயற்சி தடைப்பட்டிருக்கிறது .
எனவே தற்போதைய கட்டட மூலப்பொருள் விலையேற்றத்திற்கு அமைவாக நிதி ஒதுக்கீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.
மாநகரசபை கட்டடம் ஆயுதப் போர் காரணமாக அழிக்கப்பட்டிருந்தது . அப்பொழுதிலிருந்து நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது .
அதுதவிர யாழ் மாநகரசபை நிர்வாகத்திற்கு நிரந்தரமான கட்டடத் தொகுதியை கொண்டிருப்பது உள்ளூர் பொருளாதாரத்தில் உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பினை உருவாக்கும் வாய்ப்புக்களை உருவாக்குகிறது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிற செய்திகள்