தமிழ் அரசியற் கைதிகளின் நிலை கவலையளிக்கின்றது-சிவாஜிலிங்கம் கருத்து!

பல கொலை வழக்குகளைக் கொண்ட கொலையாளிகளைக் பிணையில் மன்னிப்பளித்து விட்டிருக்கிறீர்கள் ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை மாத்திரம் வெளியில் விட மாட்டோம் என்று சொல்வதிலே எந்தவிதமான அர்த்தமும் இல்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் – எம்.கே .சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 12 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணா விரதத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.

அங்கு நிலைமைகள் கவலைக்கிடமாக நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் தங்களை பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையில் தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பல கொலை வழக்குகளைக் கொண்ட கொலையாளிகளைக் பிணையில் மன்னிப்பளித்து விட்டிருக்கிறீர்கள்.

ஆனால் இவர்களை மாத்திரம் வெளியில் விட மாட்டோம் என்று சொல்வதிலே எந்தவிதமான அர்த்தமும் இல்லை. இவர்களை விடுதலை செய்யுமாறு இவர்களின் உறவுகள் தங்கள் தங்கள் வீடுகளில் உண்ணாவிரதத்தினை மேற்கொள்கிறார்கள். எல்லோருமே பட்டினியாக இருக்கும் ஓரு அபாயகரமான நிலைமை உருவாக்கி இருக்கிறது .

நல்லாட்சி என்று சொல்லக்கூடிய நாசமா போன ஆட்சியில் கூட பிணையில் விடுகிறோம் என்ற பேச்சுவார்த்தை மாத்திரம் நடாத்தினார்கள் .ஆனால் இன்றுவரை விடுவிக்கப்படவிலை .

எனவே உடனடியாக விரைந்து ,மரணங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *