வீட்டு பூனையுடன் கள்ளக் காதல் தொடர்பு: மனைவி பொலீஸில் புகார்!

வீட்டில் வளர்க்கப்படும் பூனையுடன் தனது கணவர் உடல் ரீதியாக தொடர்பு கொள்வதாக மனைவியொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனும் மனைவியும் கம்பஹா பொது வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

கணவரை கம்பஹா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்திய பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையின் பேரில் தம்பதியினர் மனநோய் நிபுணரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

47 வயதான கணவர் கடை உரிமையாளர். மனைவிக்கு 43 வயது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒரு குழந்தை உயர்கல்வி பயின்று வருவதால் வீட்டில் இல்லை, மற்ற இரு குழந்தைகளும் வீட்டில் உள்ளனர்.

இரண்டு குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் சம்பவம் குறித்து எதுவும் தெரியவரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

கணவன் பூனையை குளியலறையில் அழைத்துச் சென்று தன்னுடன் உடலுறவு கொள்வதை தான் பார்த்ததாக மனைவி கூறுவதாகவும், ஆனால் கணவன் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்து மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *