வலி. மேற்கு பிரதேச சபையில் பிரதேச மட்ட சுகாதாரக் கூட்டம்!

கெளரவ தவிசாளர் த.நடனேந்திரன் அவர்களின் சிந்தனையில் “வரும்முன் காப்போம்” என்ற தொனிப் பொருளினை மையமாக கொண்டு, வலி. மேற்கு பிரதேச சபையில் பிரதேச மட்ட சுகாதாரக் கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

வலி. மேற்கின் சுகாதாரத்தை (டெங்கு, கால்வாய்கள் தூர்வாரல், உணவக சுகாதாரம் பேணல், தரம்பிரித்த திண்மக்கழிவகற்றல் போசாக்கு உணவு, நோய் எதிர்ப்பு சக்தி பேணல்) பேணல் தொடர்பான விடயங்கள் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இந்த கூட்டத்தில் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், பிரதேச செயலர், சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரிகள்,வைத்தியசாலை பொறுப்பதிகாரிகள் பொலிஸ் பரிசோதகர்கள், சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வையாளர், சுகாதாரப்பரிசோதகர்கள், கோட்டக்கல்வி அதிகாரி, R.D.D மற்றும் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *