நான்காயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட யாத்திரை!(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடாத்தும்  மண்டூர் தொடக்கம் வெருகல் வரை இந்து சமய ஆன்மீக பாதயாத்திரை வெருகல் சித்திரவேலாயுத ஆலயத்தை நேற்று வியாழக்கிழமை சென்றடைந்தனர்.

திருகோணமலை மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வெருகல் சித்திரவேலாயுத ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் ஆன்மீக பாத யாத்திரை வருடா வருடம் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆன்மீக பாத யாத்திரையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மூவாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆன்மீக பாத யாத்திரையில்  கலந்து கொண்ட பக்தர்கள் கையில் நந்திக்கொடி ஏந்தி அரோகரா கோசத்துடன் செல்லும் வீதியிலுள்ள ஆலயங்களை தரிசித்து வந்தடைந்தனர்.

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஆன்மீக பாத யாத்திரை இன்று வியாழக்கிழமை மாலை வெருகல் சித்திரவேலாயுத ஆலயத்தினை வந்தடைந்தது.

ஆலயத்தினை வந்தடைந்த யாத்திரிகை பக்தர்கள் ஆலய கங்கையில் நீராடி தங்கள் வேண்டுதலை வேண்டி கொண்டனர்.

dav
dav
dav
dav

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *