வெளிவிவகார அமைச்சு: சான்றிதழ்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

கொழும்பு, செப் 16

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வெளியுறவு அமைச்சகத்தின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவில் சான்றிதழ்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இது தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் பிராந்திய அலுவலகங்களில் சான்றிதழ் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கணனி அமைப்பின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது மீளமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏனைய கொன்சியூலர் சேவைகள் எவ்வித தடங்கலும் இன்றி தொடரும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *