மார்ச் 20ஆம் திகதிக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் 20ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர், இது குறித்து செயற்படுவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும்.

எனவே, அடுத்த ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *