
இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே அதிகளவில் உதவியுள்ளது.
இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கத்துக்கு பின்னர், இலங்கையின் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஸ்திரமாகி வருகிறது.
எனவே இதுவரை வழங்கப்பட்ட 3.8 பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்க இந்தியா திட்டமிடவில்லை என்று இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது.