
வெளிநாடுகளில் மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு விமான டிக்கெட்டுகளை எளிதாக்கும் சிறப்பு முயற்சியை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் இந்த முயற்சி தொடங்கப்பட்டதாக ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு ஸ்ரீலங்கன் கேர்ஸ் மெடிக்கல் டிக்கெட் திட்டத்தில் இருந்து உதவி கிடைக்கும்.
ஸ்ரீலங்கன் கேர்ஸ் முன்முயற்சியானது தெரிவுசெய்யப்பட்ட நோயாளியை சிகிச்சைக்காக பெற்றோருடன் பயணிக்க அனுமதிக்கிறது.
பிற செய்திகள்