திலீ­ப­னின் அஞ்­சலி நிகழ்­வி­லும் அர­சி­யல்­வா­தி­கள் அசிங்­கத்­த­னம்

திலீ­ப­னின் நினை­வேந்­த­லில் மட்­டு­மல்ல, எந்த நினை­வேந்­தல்­க­ளி­லும் கட்சி அர­சி­ய­லைக் கலந்து அவற்­றின் புனி­தத்தை மாசு­ப­டுத்த வேண்­டாம் என்று தய­வு­டன் வேண்­டு­கி­றேன். அனைத்து மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர் சார்­பி­லும் முத்­துக்­கு­மார் மனோ­கர் (பஷீர் காக்கா) ஆகிய நான் இந்த வேண்­டு­கோளை விடுக்­கின்­றேன் – என்று கோரி­யுள்­ளார் விடு­த­லைப் புலி­க­ளின் மூத்த (முன்­னாள்) போரா­ளி­யான பஷீர் காக்கா.

தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நல்­லூ­ரில் நேற்று ஆரம்­ப­மா­கின. இந்த நினை­வேந்­தல் நிகழ்­வில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் கஜேந்­தி­ர­கு­மார் அணிக்­கும், மணி­வண்­ணன் அணி­யி­ன­ருக்­கும் இடை­யில் நேற்­றும் குழப்­பங்­கள் ஏற்­பட்­டன. இதை­ய­டுத்து விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே பஷீர் காக்கா இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.
அந்த அறிக்­கை­யில் மேலும் உள்­ள­தா­வது:

திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வில் பிறி­தொரு அணி­யி­ன­ரைச் சாடும் வகை­யில் சட்­டத்­த­ரணி சுகாஷ் உரை­யாற்­றி­யமை எமக்கு வேத­னையை உண்­டாக்­கு­கி­றது. நேற்று (நேற்­று­முன்­தி­னம்) இவர் சார்ந்த கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரும் திலீ­பனை நேரில் கண்­ட­வர்­க­ளில் ஒரு­வ­ரு­மா­கிய பொன் மாஸ்­ட­ரி­டம் ‘இந்த நிகழ்வை பொது­நி­கழ்­வாக நடத்­து­வ­தில் உங்­க­ளுக்­குள்ள சங்­க­டங்­கள் என்ன?’ என்று கேட்­டேன். ‘எது­வும் இல்லை’ என பதி­ல­ளித்­தார். அது திருப்தி அளித்­தது. அந்த நம்­பிக்­கையை சித­ற­டிக்­கும் விதத்­தில் சட்­டத்­த­ரணி சுகாஷ் இன்­றை­ய­தி­னம் (நேற்று) நடந்து கொண்­டார்.

ஏற்­க­னவே மாவீ­ரர் நாள் நிகழ்­வு­களை ஏனைய கட்­சி­க­ளைத் தாக்­கும் கள­மா­கப் பயன்­ப­டுத்த வேண்­டாம் என அந்­தக் கட்­சி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மாரை நேரில் சந்­தித்து வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­தேன். அத­னைக் கடைப்­பி­டிப்­ப­தாக அவர் என்­னி­டம் உறு­தி­ய­ளித்­தார். எனி­னும் கிளி­நொச்­சி­யில் நிகழ்ந்த மாவீ­ரர்­க­ளின் பெற்­றோ­ரு­டைய கௌர­விப்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சாடி­யமை தொடர்­பில் பத்­தி­ரி­கை­யில் செய்தி வெளி­யா­ன­போது மிக­வும் வேத­னைப்­பட்­டேன்.

அவ்­வா­றான நிலைமை மீண்­டும் ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக பொன் மாஸ்­டரை சந்­தித்து உரை­யா­டி­னேன். எனவே இவ்­வாண்டு திலீ­ப­னின் நினைவு நிறை­வ­டை­யும் வரைக்­கும் அர­சி­யலை கலக்­கா­மல் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு மன்­றாட்­ட­மாக அனைத்து கட்­சி­க­ளை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன். எமது உணர்­வு­களை எதிர்­கா­லத்­தில் மதிப்­பார்­கள் என நம்­பு­கி­றேன் – என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *