
இருபாலையில் புலிகளின் நகைகள்?
நீதிமன்றின் அனுமதிபெற்று விரைவில் அகழ்வுப்பணிகள்
இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில், விடுதலைப் புலிகளின் நகைகளும், ஆயுதங்களும் இருப்பதாக இரகசியத் தகவல் கிடைத்துள்ளதால், அங்கு அகழ்வுப்பணியை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திடம் கோப்பாய் பொலிஸார் நேற்று அனுமதி கோரியுள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதிபெற்று விரைவில் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த அகழ்வுப் பணிகளுக்காக கொழும்பில் இருந்து சிறப்புக் குழுவொன்றும் வரவழைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்தக் குழு நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழ்வை மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகின்றது.