அறிக்­கை­க­ளால் இலங்­கையை மிரட்­டு­வதை உடன் நிறுத்­துக! -பிர­சன்ன ரண­துங்க சீற்­றம்

அறிக்­கை­க­ளால் இலங்­கையை மிரட்­டு­வதை உடன் நிறுத்­துக!

மனித உரி­மை­கள் அமைப்­பு­க­ளி­டம் அமைச்­சர் பிர­சன்ன ரண­துங்க சீற்­றம்

‘சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­கள் அறிக்­கை­களை வெளி­யிட்டு இலங்­கையை மிரட்­டு­வதை உடன் நிறுத்த வேண்­டும் – இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளார் ஆளும் கட்­சி­யின் பிர­தம கொற­டா­வும் அமைச்­ச­ரு­மான பிர­சன்ன ரண­துங்க.

ஜெனி­வா­வில் இலங்கை மீது வலு­வான தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வேண்­டும் என்று சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­கள், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் பேர­வை­யின் உறுப்பு நாடு­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

சர்­வ­தேச மன்­னிப்­பு­சபை, போரம் ஏசியா, மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம் மற்­றும் சர்­வ­தேச சட்ட வல்­லு­நர்­கள் ஆணைக்­குழு ஆகி­ய­வையே இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளன. இது தொடர்­பில் கருத்­து­ரைக்­கும்­போதே அமைச்­சர் பிர­சன்ன ரண­துங்க மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

‘இலங்கை மீது வெளி­யில் இருப்­போர் அழுத்­தங்­க­ளைப் பிர­யோ­கிக்க முடி­யாது. எமது நாடு இறை­மை­யுள்ள நாடு. சர்­வ­தேச தீர்­மா­னங்­க­ளையோ அல்­லது சர்­வ­தேச சட்­டங்­க­ளையோ இலங்கை மீது பிர­யோ­கிக்க முடி­யாது. இங்கு பிரச்­சி­னை­கள், குற்­றச்­சாட்­டுக்­கள் இருப்­பின் அது தொடர்­பில் உள்­ள­கப் பொறி­மு­றை­யூ­டா­கத்­தான் ஆராய்ந்து பார்க்க முடி­யும். உள்­நாட்­டுப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு வெளி­ய­கப் பொறி­முறை அவ­சி­ய­மில்லை. அதை நாம் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம்’  -என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *