வடக்கில் காலா­வ­தி­யான பைஸர் ஊசி ஏற்றல்!!

காலா­வ­தி­யான பைஸர்-

உண்மையை மறைத்தே ஊசி ஏற்றப்பட்டதாம்!

தடுப்­பூசி ஏற்­று­வது தொடர்­பில் பாட­சாலை அதி­பர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தா­லும், அவை காலா­வ­தி­யா­னவை என்ற உண்­மையை மறைத்தே மாண­வர்­க­ளுக்கு கடந்த சில நாள்­க­ளாக தடுப்­பூ­சி­கள் ஏற்­றப்­பட்­டுள்­ளன என்ற விவ­ரம் தெரி­ய­வந்­துள்­ளது.

யாழ். நக­ரப் பாட­சா­லை­க­ளில் பைஸர் தடுப்­பூ­சி­யின் இரண்­டா­வது டோஸ் ஏற்­றா­த­வர்­க­ளுக்­கும், மூன்­றா­வது டோஸ் ஏற்ற விரும்­பு­வர்­க­ளுக்­கும் சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தால் ஊசி ஏற்­றல் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இதற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் பைஸர் தடுப்­பூசி கடந்த ஜூலை மாதம் 31ஆம் திக­தி­யு­டன் காலா­வ­தி­யா­கி­யுள்­ளது. இருப்­பி­னும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக அதனை எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 31ஆம் திகதி வரை­யில் பயன்­ப­டுத்த முடி­யும் என்று சுகா­தார அமைச்சு சுற்­ற­றிக்கை ஊடா­கத் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்த நிலை­யில் வடக்கு மாகா­ணத்­தில் காலா­வ­தி­யான தடுப்­பூ­சியை ஏற்­றும் செயற்­பாட்டை வடக்கு மாகாண முன்­னாள் சுகா­தார பணிப்­பா­ள­ராக இருந்த மருத்­து­வர் ஆ.கேதீஸ்­வ­ரன் தவிர்த்து வந்­தார். புதிய சுகா­தா­ரப் பணிப்­பா­ள­ராக மருத்­து­வர் திலிப் லிய­னகே நிய­மிக்­கப்­பட்ட பின்­னர் அந்த நட­வ­டிக்கை துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

பாட­சாலை மாண­வர்­க­ளுக்கோ, அவர்­க­ளின் பெற்­றோ­ருக்கோ, அதி­பர்­க­ளுக்கோ காலா­வ­தி­யான தடுப்­பூசி ஏற்­றப்­ப­டு­கின்­றது என்ற தக­வல் தெரி­விக்­கப்­ப­டா­மல் தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது. ‘உத­யன் பத்­தி­ரிகை’ இந்த நட­வ­டிக்­கையை நேற்­றைய தினம் வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்­த­தை­ய­டுத்து சில பெற்­றோர் பாட­சாலை அதி­பர்­க­ளி­டம் இது தொடர்­பில் கேள்வி எழுப்­பி­ய­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *