மியான்மாரின் முன்னணி தேரரினால் இலங்கைக்கு அமெ.டொலர்கள் நன்கொடை

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மியான்மாரின் துணை சங்க ராஜா சிதாகு சயாதாவ் மோஸ்ட். வண.அஷின் நயனிஸ்ஸர தேரர் அரசாங்கத்திற்கு 10,000 அமெரிக்க டொலர்களை (சுமார் இலங்கை ரூபாய் 3,679,200/-) நன்கொடையாக அண்மையில் வழங்கியுள்ளார்.

மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவிடம் இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மியான்மரின் துணை சங்க ராஜாவுக்கு தூதுவர் மரியாதை செலுத்தினார்.

நன்கொடையை ஏற்றுக்கொண்ட தூதுவர் ஜனக பண்டார, இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு 10,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியதற்காக மியான்மாரின் துணை சங்க ராஜாவுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *