பைஸரை ஏற்றாவிட்டால் மாணவர்கள் சாக நேரிடும்! -வடக்கு மருத்­து­வர்­க­ளுக்கு சிங்­கள அதி­காரி ‘ஐடியா!’

பெற்­றோ­ரி­டம் பிள்ளைகள் சாக நேரிடுமென மிரட்டி பைஸரை ஏற்றுங்கள்!

வடக்கு மருத்­து­வர்­க­ளுக்கு சிங்­கள அதி­காரி ‘ஐடியா!’

பைஸர் தடுப்­பூ­சி­களை ஏற்­றா­விட்­டால் மாண­வர்­கள் உயி­ரி­ழப்­பார்­கள் என்று பெற்­றோரை அச்­சு­றுத்­தி­ தடுப்­பூ­சி­களை ஏற்­றுங்­கள்என்று மருத்­து­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்­போது சிங்­கள அதி­காரி ஒரு­வர் மிரட்­டி­யுள்­ளார்.

இலங்­கை­யி­லேயே வடக்கு மாகா­ணத்­தில்­தான் 4 ஆவது டோஸ் ஏற்­றி­ய­வர்­கள் குறை­வாக உள்­ளார்­கள் என்­றும் அந்­தச் சிங்­கள அதி­காரி தெரி­வித்­துள்­ளார். நாடு முழு­வ­தும் 4ஆவது டோஸை -காலா­வ­தி­யான பைஸரை-0.8 சத­வீ­தத்­தி­னரே இது­வரை ஏற்­றி­யுள்­ள­னர்.

இந்­தத் தக­வலை மறைத்து மேற்­கண்­ட­வாறு அந்த அதி­காரி கூறி­யுள்­ளார்.

இதே­வேளை தடுப்­பூசி தொடர்­பான விட­யங்­க­ளில் இது­வரை கால­மும் எந்­த­வொரு கடி­தங்­களோ, அறி­வு­றுத்­தல்­களோ, சுற்­ற­றிக்­கை­களோ அனுப்­பாத வடக்கு மாகாண பிர­தம செய­லர் சமன் பந்­து­ல­சேன, காலா­வ­தி­யான தடுப்­பூசி ஏற்­றப்­ப­டா­மல் இருப்­பது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­துக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

காலா­வ­தி­யான தடுப்­பூ­சியை ஏற்ற முடி­யும் என்ற சுகா­தார அமைச்­சின் சுற்­ற­றிக்­கை­யை­யும் இணைத்து அவர் அந்­தக் கடி­தத்தை அனுப்­பி­யுள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *