கமத்தொழிலை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில், ஏப்பாவெல கெடகாலய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய் செய்கையை கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னால் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக ஆகியோர் பார்வையிட்டனர்.
அத்துடன் அறுவடை செய்யப்பட்ட பழுத்த மிளகாய்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்ந்த மிளகாய்க்காக பதப்படுத்தும், அனுராதபுர ஹூரிகஸ்வௌ மகுலேவ பிரதேசத்தில் அமைந்துள்ள மிளகாய் பதப்படுத்தல் நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.
எமது நாட்டில் மேலும் மிளகாய் உற்பத்தியை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டாலும், நாட்டின் மிளகாய்த் தேவையில் 60 வீதத்திற்கும் அதிகமான மிளகாய் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படும் பணத்தை, விவசாயிகளுக்கு வழங்கி, நாட்டின் நுகர்வுக்கு அசியமான பச்சை மற்றும் காய்ந்த மிளகாயை உள்ளுரிலேயே உற்பத்தி செய்வதனால், டொலர்களை சேமித்து, நாட்டிற்கு அவசியமான வெளிநாட்டு அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதே தமது பிரதான நோக்கமாகும் என விவசாய அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மிளகாய் உலகிலுள்ள அதிக இரசாயனம் மிக்க பொருள் பயன்படுத்தப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசேடமாக நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள நச்சுப் பொருட்கள், அந்நாடுகளில் மிளகாய்ப் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் நமது நாட்டில் அறுவடை செய்யப்படும் மிளகாய் மிகவும் சிறந்தவை என பயிர்ச்செய்கையாளர்கள் அங்கு தெரிவித்தனர்.
பிற செய்திகள்