சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவையில் கைது!

பொகவந்தலாவ, மாவெலி வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஜந்து சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

மாவெலி வனப்பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மானிக்ககல் அகழ்வு தொடர்பாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த ஜந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜந்து பேரும் பொகவந்தலாவ, இராணிகாடு மற்றும் ஆல்டி தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *