
கொழும்பு, செப் 16
போராட்டம் முடிந்துவிட்டதாக யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் அமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்காலத்தில் இதைவிட பெரிய போராட்டமொன்று வெடிப்பதை காண முடியுமெனவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கான வேலைத்திட்டம் நாட்டிலோ, நிர்வாக அமைப்பிலோ இல்லாததே இதற்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய தயாசிறி எம்.பி., கல்வியை சீர்திருத்தவோ, திறமையுடன் கூடிய பரிபூரண சக்தியை உருவாக்கவோ அரசாங்கத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லையெனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் திருடர்கள் அல்ல என்றும், ஒரு சிலரின் திருட்டுத்தனத்தால், ஒட்டுமொத்த எம்.பிக்களும் குற்றஞ்சாட்டுகளுக்கு உள்ளாவதாகவும் தயாசிறி ஜயசேகர எம்.பி. குறிப்பிட்டார்.