பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும அணியினர் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவர்களது வெத்து வேட்டுகளுக்கு பதிலளித்து எமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினரின் அரசியல் பயணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை அவர்களுக்கு மக்கள் பலம் இல்லை. வெத்து வேட்டுகள். தேர்தல் வரும்போது இது உறுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்