போராட்டம் முடிந்துவிட்டதாக நினைத்தால் அது முற்றிலும் தவறு – தயாசிறி ஜயசேகர

போராட்டம் முடிந்துவிட்டதாக யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் அமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த, எதிர்காலத்தில் இதைவிட பெரிய வெடிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கான வேலைத்திட்டம் நாட்டிலோ, நிர்வாக அமைப்பிலோ இல்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர், கல்வியை சீர்திருத்தவோ, திறமையுடன் கூடிய பரிபூரண சக்தியை உருவாக்கவோ அரசாங்கம் எந்த எதிர்பார்ப்பும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் திருடர்கள் அல்ல என்றும் ஒரு சிலரின் திருட்டுத்தனத்தால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *