பைஸர் தடுப்பூசிகளை ஏற்றாவிட்டால் மாணவர்கள் உயிரிழப்பார்கள் என்று பெற்றோரை அச்சுறுத்தி தடுப்பூசிகளை ஏற்றுங்கள் என்று மருத்துவர்களுடனான கலந்துரையாடலின் போது சிங்கள அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் தான் 4வது டோஸ் ஏற்றியவர்கள் குறைவாக உள்ளார்கள் என்றும் அந்த சிங்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் 04வது டோஸ் ஏற்றியவர்கள் குறைவாக உள்ளார்கள் என்றும் அந்த சிங்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் 4வது டோஸை காலாவதியான பைஸரை 0.8வீதமான மக்களே பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்த தகவலை மறைத்து மேற்கண்டவாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளை தடுப்பூசி தொடர்பான விடயங்களில் இதுவரை காலமும் எந்தவொரு கடிதங்களோ அறிவுறுத்தல்களோ சுற்றறிக்கைகளோ அனுப்பாத வடக்கு மாகாண பிரதம செயலர் காலாவதியான காலாவதியான தடுப்பூசி ஏற்றப்படாமல் இருப்பது தொடர்பில் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அதேவேளை காலாவதியான தடுப்பூசியை ஏற்றமுடியும் என்ற சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையையும் இணைத்து அவர் அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பிற செய்திகள்