இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. அம்மாறை மாவட்டம் அட்டப்பளம் விளையாட்டுக்கழகம் மற்றும் மல்வத்தை விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்படி உதவித் திட்டங்கள் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர் லோ.கஜரூபன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
அட்டப்பளம் ஜொலி ஸ்டார் வினையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கழக உறுப்பினர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் முகமாக பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மல்வத்தை விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு பெறுமதி வாய்ந்த கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகள், புத்தகப் பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. மாணவர்களுக்கான புத்தகப் பைகளுக்கான நிதிப்பங்களிப்பினை இணைந்த கரங்கள் அமைப்பின் ஆர்வலர் சுஜிதரன் வழங்கி இருந்தார்.
அத்துடன், மேற்படி பாடசாலையின் பெயர் பலகையில்லாத குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இணைந்த கரங்கள் அமைப்பின் ஆர்வலரான கண்ணன்வேலு அவர்களின் நிதிப்பங்களிப்பில் பெயர்ப்பலகை அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்றைய தினம் அப்பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இப்பாடசாலை நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சபூர் தம்பி, ஆசிரிய ஆலோசகர் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் எம்.ஏ.எம்.ரசீத் பாடசாலையின் அதிபர் எஸ்.கிருபைராஜா, இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான சேதுநாதபிள்ளை, ரிஸ்வான், தஜன், காந்தன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







பிற செய்திகள்