
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எம் உறவுகளை விடுவியுங்கள் என ,சிறையில் உள்ளவர்களின் உறவுகள் கவலையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறையில் உள்ளவர்களை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த 11 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனவர்.அவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக,வழக்குகள் தொடுக்கப்படாத நிலையிலும் சிறையில் வாடுகின்றனர்.
இரண்டு தடவைகள் ஆளுநரைச் சந்திக்க வந்தோம்.மகஜர் கொடுத்தோம்.இன்னும் அவரை சந்திக்க முடியவில்லை.அவர்கள் சிறையில் உண்ணாவிரதம் உள்ளனர்.அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர ஒரு வழி சொல்லுங்கள்.எங்களோடு இருக்கிற பிள்ளைகளை பற்றி சிந்திப்பதா இல்லையென்றால் சிறையில் உள்ளவர்களை பற்றி சிந்திப்பதா என்று எமக்கு தெரியவில்லை.நாமும் இங்கே சாப்பிடாமல் இருக்கின்றோம்.பிள்ளைகள் எமக்கு உயிரோடு கிடைக்குமோ என்று கூட தெரியாது என்றனர்.
மேலும் “எண்ட அப்பாவை எங்களிடம் தாருங்கள் “என்று சிறுமி ஒருவரும் இதன் போது தனது அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்