சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் ஒத்துழைப்புடன் வடமாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்கள்!

வட மாகாணத்தில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஒத்துழைப்புடன் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்ற வடக்கு ஆளுநர் அங்குள்ள துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடி நிலையில்  ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

வடக்கின் சுகாதாரத் துறையை மேம்படுத்த  சிங்கப்பூர் அரசாங்கம் உதவுவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் அதன் அடுத்த படிநிலைகளுக்கு செல்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புகளை மேற்கொள்பவர்க்கும் புலமைப் பரிசில்களை  பெற்றுக் கொடுப்பதற்கும் வடக்கு மாகாணத்துடன் இணைந்து சிங்கப்பூர் பல்கலைக்கழகம் செயற்பட உள்ளது.

மேலும் மலேசியா சுற்றுலா துறை அனுபவங்களை வடக்கின் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்வதும் முதலீட்டாளர்களை அழைப்பது தொடர்பிலும் முதற்கட்ட சந்திப்புகள் பயனுள்ளதாக அமைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *