காலை பிரார்த்தனைகளின் போது மயங்கி விழும் பாடசாலை மாணவர்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

கூட்டுப் பிரார்த்தனைகளின் போது மயங்கி விழும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, குறைந்து 2,500 ரூபா செலவாவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு, உணவு தேவைக்காக நாளாந்தம் 4,000 ரூபா செலவாவதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 27,000 பேர் கடும் பேசாக்கு குறைப்பாட்டுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 27,000 சிறார்கள் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் 5 வயதுக்கும் குறைந்த சிறார்கள் உணவு பாதுகாப்பு வீழ்ச்சி காரணமாக போசாக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

பலர் மூன்று வேளை உணவை உட்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *