மூன்று சட்டமூலங்கள் மீதான சான்றிதழுக்கு சபாநாயகர் ஒப்புதல்!

மூன்று சட்டமூலங்கள் மீதான சான்றிதழுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அதன்படி, இரண்டு தொழில் தகராறுகள் (திருத்தம்) சட்டமூலங்கள் (130 மற்றும் 132) மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் ஆகியவை சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்றன.

அதன்படி, இந்த சட்டமூலங்கள் 2022 ஆம் ஆண்டின் தொழில் தகராறுகள் (திருத்தம்) சட்டம் எண் 22, பணியாளர்களை பணிநீக்கம் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் எண் 23, 2022 மற்றும் தொழில் தகராறுகள் (திருத்தம்) என இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த மூன்று சட்டமூலங்களும் விவாதம் இன்றி கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *