
கொழும்பு, செப் 16
யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றில் , விடுதலைப் புலிகளின் நகைகளும் ஆயுதங்களும் இருப்பதாக இரகசியத் தகவல் கிடைத்துள்ளதால் அங்கு அகழ்வுப் பணியை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திடம் கோப்பாய் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர் .
இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று விரைவில் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன . இந்த அகழ்வுப் பணிகளுக்காக கொழும்பில் இருந்து சிறப்புக் குழுவொன்றும் வரவழைக்கப்பட்டுள்ளது .