நாவிதன்வெளியில் பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இஸ்லாமிக் ரிலீஃப் அரச சார்பற்ற நிறுவனத்தால் வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன் வழிகாட்டலில் இன்று (16.09.2022) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.சிபாயாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக அதிகாரி கே. யோகேஸ்வரன் அதிதியாக கலந்து கொண்டார்.

சுயதொழில் ஊக்குவிப்பு வேலை திட்டத்தின் கீழ் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 80,000 ரூபா பெறுமதியான சுயதொழில் உதவி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் கோவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்த பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் வேலை திட்டத்தின் கீழ் 10 ,000 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இங்கு வழங்கப்பட்டன.

இஸ்லாமிக் ரிலீஃப் நிறுவனத்தின் சிரேஸ்ட் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.எச்.சுபுஹான், திட்ட உத்தியோகத்தர் ரி.ரமேஸ், உளவளத்துணை ஆலோசகர் ஏ. சுதர்சன் உட்பட மகளிர் அபிவிருத்தி பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *