தியாகி திலீபனுக்கு யாரும் அஞ்சலி செலுத்தலாம், ஆனால் உரிமை கோர வேண்டாம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
திலீபனின் நினைவேந்தல் வாரம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
திலீபன் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்து உயிரை நீர்த்தவர். அவரை யாரும் நினைவு கூரலாம், ஆனால் உரிமை கோர முடியாது.
கொட்டில்கள் அமைத்து சண்டை பிடிக்கக் கூடாது. விளம்பரம் செய்ய முடியாது. அது முறையும் அல்ல. அன்று நினைவுத்தூபி நல்லூரில் அமைப்பதற்கு காரணமானவர்களுள் நானும் ஒருவன்.
1988 ஆம் ஆண்டு அதற்கான வேலைகள் நிறைவுக்கு வந்தது. அதற்காக துப்பாக்கிச் சூடு வாங்கியவன் நான்.
அன்று என்னுடைய சொந்தக் காசில் நிலத்தைக் குத்தைக்கு எடுத்து அந்த தூபியைக் கட்டினேன். அதற்காக நான் உரிமை கொண்டாடவில்லை.
தீலீபனின் கோரிக்கைகளில் ஒற்றை ஆட்சி முறை பற்றியோ, 13 ஆம் திருத்தும் தொடர்பிலோ திலீபன் கதைக்கவில்லை. ஆனால் அதற்காக போராடினார், இறந்தார் என சிலர் சண்டை போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.- என்றார்.
பிற செய்திகள்