
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையின் அரசியல் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு , தமது அஞ்சலியையும் அனுதாபத்தையும் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனது அஞ்சலியையும் அனுதாபத்தையும் செலுத்தியுள்ளார்.
பிற செய்திகள்
.