வாகரையில் ஆயுதங்கள்,வெடிபொருட்கள் மீட்பு

வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரவெளி பால்சேனை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய வாகரை பொலிஸாரின் உதவியுடன் குறித்த பிரதேசத்தில் ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 200 ஜி.பி.எம்.ஜி. ரவைக்கோர்வை, 750 ஜி.பி.எம்.ஜி. தோட்டாக்கள், 50 கலிபர் ரவை, பெராக்குண்டு, 07 ஏ.கே ரவைக்கூடுகள், கைக்குண்டு, கண்ணிவெடி, எறிகணை போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விசாரனைகள் இடம் பெருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *