சர்வதேச சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நிகழ்வுகள்

செப்டம்பர் மாதம் 17 ம் திகதி தொடக்கம் 23 ம் திகதி வரை சர்வதேச சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் எதிர்வரும் 23 ம்திகதி திருகோணமலை பொது வைத்தியசாலை உள்ளிட்ட நகர்ப்புற கரையோரப்பிரதேசத்தை தூய்மைப்படுத்துவதற்கான சிரமதானமொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவின் வழிகாட்டுதலிற்கமைய இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ள சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் வடகிழக்கு மாகாண உதவி முகாமையாளர் டி. சிறீபதி தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 23 ம்திகதி காலை 7.30 மணிக்கு சிரமதான நிகழ்வு திருகோணமலை வைத்தியசாலை சார் கரையோரப்பிரதேசத்தில் ஆரம்பமாகும்.

வைத்தியசாலை அபிவிருத்தி சமூகம், முப்படை, பொலிஸ்,ஏனைய திணைக்களங்கள், சிவிலமைப்புக்களும் இச்சிரமதான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். பிரதேச வாழ் நலன்விரும்பிகளும் இப்பணிக்கு தங்களுடைய பங்களிப்பினை வழங்க முடியும்.

அத்துடன் இவ்வாரத்தினுள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களிலும் இலங்கை கடற்படையுடன் இணைந்து கரையோரத்தை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞர் அபிவிருத்தி அகம் மற்றும் we effect ஆகிய நிறுவனங்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கவுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *