திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் நாளை யாழில் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபியில் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலை ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்கிச் சிறப்பாக நடாத்துவது தொடர்பில் நாளைய தினம் யாழில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமயத் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடல் நாளை  (17.9.2022)  மணியளவில் யாழ்.நாவலர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மேற்படி தரப்பினர் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *