மே9 வன்முறைச் சம்பவங்கள்: மேலும் அறுவர் கைது!

நாடளாவிய ரீதியாக கடந்த மே 9ஆம் திகதி ஏற்பட்ட குழப்ப நிலையுடன் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் 6 பேர் கைதாகினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித்த அபேகுணவர்த்தனவின் இரத்மலானையில் உள்ள வீடு மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகளுக்கு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர்கள் இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தெஹிவளை முன்னாள் நகர முதல்வர் தனசிறி அமரதுங்க மற்றும் அவரது சகோதரரின் வீட்டிற்கு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத்தின் காரியாலயம் மற்றும் அதன் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கொக்கரல்ல பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கைதானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *