
கொழும்பு, செப். 17: இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த மே 20ஆம் திகதியன்று 3 மில்லியன் டொலர்களை ஜப்பான், இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக வழங்கியிருந்த நிலையில், மீன்டும் இந்த உதவியை வழங்கவுள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த 3.5 மில்லியன் டொலர்களையும் சேர்த்து 6.5 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது.
இந்த உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பானுடன் நீண்டகால, இணக்கமான உறவைக் கொண்டுள்ள இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை போக்கும் வகையில் இந்த உதவியை செய்துள்ளதாக ஜப்பான் அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.