இன்று இங்கிலாந்து செல்கிறார் ஜனாதிபதி

கொழும்பு, செப். 17: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இங்கிலாந்து செல்லவுள்ளார்.

இன்று இலங்கையிலிருந்து புறப்படும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெறும் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவுள்ளார்.

இங்கிலாந்தின் மிக நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணி 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் உயிரிழந்தார்.

மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரச நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை அரசு விடுமுறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *