வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அலையென திரண்ட மக்கள்!

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக கொழும்பில் அலையென மக்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கட்டார் விமான சேவை நிறுவனத்தின் வெற்றிடத்திற்காக நேர்முகத்தேர்வு நேற்றையதினம் நடைபெற்றது.

இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொழும்பில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் திரண்டிருந்தனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றனரை்.

இந்நிலையில், நேர்முகத் தெர்விற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் காணொளியொன்று டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *