கணவர் கொலையின் சந்தேகநபராக மனைவி! திடுக்கிடும் சம்பவம்!

அகலவத்தை பகுதியில் நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவரனவும், குடும்ப தகராறு காரணமாக அமிலத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில், 38 வயதுடைய பெண், அவரது 64 வயதுடைய சிறிய தந்தை மற்றும் 36 வயது சகோதர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் உயிரிழந்த நபருடைய மனைவி என்பதுடன் அவர் சட்டத்தரணி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனது கணவர் தனக்குத்தானே அமிலத்தை ஊற்றிக் கொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி பெண் தெரிவித்துள்ளார்.

அமிலத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *