கையெழுத்து இடும் வேலைத்திட்டம் இன்று திருமலையில் முன்னேடுப்பு!

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்திவழி கையெழுத்துப் போராட்டம் இன்று திருகோணமலை சிவன்கோயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை நாட்டில் நடைமுறையில் உள்ள குறித்த சட்டத்தின் காரணமாக மூவின மக்களும் பாதிக்கப்படுகின்ற நிலையில் குறித்த கையெழுத்து வேட்டையில் மூவின மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *