தியாகி திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து ஆரம்பமான தியாகி திலீபனின் படத்தை தாங்கிய ஊர்தி ஊர்வலம் இன்று சனிக்கிழமை (17) காலை திருகோணமலை – கிளிவெட்டி பகுதியை வந்தடைந்தது.
இதன்போது கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து தமது அஞ்சலியை செலுத்தினர்.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


பிற செய்திகள்