உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரியில் சேர்க்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளமையையும் அவர் கண்டித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *