பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

‘ஒப்பற்ற கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் தாங்கள் மேற்கொண்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி, தங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புவதாக’ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமது பிறந்தநாளான இன்று, மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதுதவிர, நாட்டின் புதிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.

இதனிடையே நமிபியாவில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்தியாவில் வாழ்ந்து 70 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன, 8 சிறுத்தைகளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடி குனோ தேசிய உயிரியியல் பூங்காவில் திறந்து விடவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *