திருகோணமலை நகரில் கரையோரசூழல் பாதுகாப்பு வாரம் இன்றிலிருந்து (17) எதிர் வரும் 23.09.2022 வரை அனுஸ்டிக்கப்படுகின்றது..
மேலும், இதற்கான ஏற்பாட்டை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டு ள்ளதாக அதன் முகாமையாளர் திருநாவுக்கரசு சிறிபதி தெரிவித்தார். காலை 6.30மணியளவில் திருக்கோணேஸ்வரத்திற்கு நுழையும் பகுதியில் உள்ள மான் பூங்காவை அண்டிய கடற்கரையில் கழிவுகளை அகற்றும் சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 60 இற்கும் அதிகமான கடற்படைவீர்கள் முதற்கட்டமாக பங்கு கொண்டனர்.
இந்நடவடிக்கை தொடர்ந்தும் 23.09.2022வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு இளைஞர் அபிவிருத்தி அகம் அனுசரணை வழங்கியிருந்தது.
இந் நிகழ்வில் அகத்தின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தம், திருகோணமலை நகரசபையின் செயலாளர் வி. ராஜ சேகர், கரையோரபாதுகாப்பு திணைக்கள ப்பணிப்பாளர், மற்றும் கரையோர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்