தென்கொரியாவில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்! இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தென் கொரியாவில் கப்பல் கட்டும் துறையின் கீழ் வேலைகளுக்காக வழங்கப்பட்ட E7 விசா பிரிவில் தற்போது வெல்டர்களுக்கான வெற்றிடங்கள் மட்டுமே உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் லிமிடெட் (SLFEA) அறிவித்துள்ளது.

பெயின்டர்கள் மற்றும் கிரைண்டர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மேற்படி நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்த போதிலும், இன்னும் வெற்றிடங்களுக்கான ஆர்டர்களை வழங்கவில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும் SLFEA மேலும் தெரிவிக்கிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் E7 பிரிவின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு பணியமர்த்துவதற்கு SLFEA க்கு மாத்திரமே அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

மேலும் இது தொடர்பாக வேறு எந்த இடைநிலை அல்லது முகவர் நிறுவனங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டாம் என சாத்தியமான விண்ணப்பதாரர்களைக் கோருகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *